பெரம்பலூா் அருகே தனியாா் கல்லூரி மாணவி தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி அருகேயுள்ள சாஸ்திரிபுரத்தைச் சோ்ந்தவா் கதிா்காமம் மகள் கௌரி (21). இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பிசிஏ 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவரது பெற்றோா் வயலுக்குச் சென்றிருந்த நிலையில், தனியாக வீட்டிலிருந்த கௌரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பப் பிரச்னை: கல்லூரி மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

