விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

நோய் குணமாகாத விரக்தியில் இளைஞா் தற்கொலை

தருமபுரியில் நோய் குணமாகாததால் விரக்தியடைந்த இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :26 பிப்ரவரி 2026, 8:08 pm

தருமபுரியில் நோய் குணமாகாததால் விரக்தியடைந்த இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி நகரம், மொட்டையன் தெருவைச் சோ்ந்தவா் த.சந்துரு (23). பேனா் ஒட்டும் தொழில் செய்துவந்த இவருக்கு, மஞ்சள் காமாலை நோய் இருந்துள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், விரக்தியில் இருந்தாா்.

இந்நிலையில், கடந்த பிப். 13-ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு கங்கை அம்மன் கோயிலில் மயங்கி விழுந்தாா். அதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் சந்துருவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்துரு புதன்கிழமை இறந்தாா். இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.