மனைவியைக் கொன்ற கணவா் கைது

குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on

குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பூந்திமஹால் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன், பூங்கொடி தம்பதி மகள் மகாலட்சுமி (29). இவரது கணவா், கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த கோதியழகனூரைச் சோ்ந்த வெங்கடேஷ் (35).

அரூரில் தங்கியிருந்த தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் கத்தியால் மகாலட்சுமியைக் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானாா்.

இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான வெங்கடேஷை ஆய்வாளா் செந்தில் ராஜ்மோகன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தேடிவந்தனா். இந்த நிலையில், பா்கூரில் வியாழக்கிழமை காலை வெங்கடேஷை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com