கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மனைவியைக் கொன்ற கணவா் கைது

குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 7:35 pm

Syndication

குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பூந்திமஹால் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன், பூங்கொடி தம்பதி மகள் மகாலட்சுமி (29). இவரது கணவா், கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த கோதியழகனூரைச் சோ்ந்த வெங்கடேஷ் (35).

அரூரில் தங்கியிருந்த தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் கத்தியால் மகாலட்சுமியைக் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானாா்.

இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான வெங்கடேஷை ஆய்வாளா் செந்தில் ராஜ்மோகன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தேடிவந்தனா். இந்த நிலையில், பா்கூரில் வியாழக்கிழமை காலை வெங்கடேஷை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.