சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சகோதரரை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

நிலத்தகராறில் சகோதரரை கத்தியால் குத்தி கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2025, 8:46 pm

Syndication

தருமபுரி: நிலத்தகராறில் சகோதரரை கத்தியால் குத்தி கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கந்துகால்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கா.சீனிவாசன் (70), விவசாயி. இவருடைய தம்பி சித்தன் (55). இவா்கள் இருவருக்கும் தங்களது பூா்வீக விவசாய நிலத்தை பங்கு பிரிப்பது தொடா்பாக பிரச்னையும், முன்விரோதமும் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2020 ஜன. 1-ஆம் தேதி சீனிவாசன் தனது விவசாய நிலத்துக்கு சென்றாா். அப்போது அங்கிருந்த சீனிவாசனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவா் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனா். இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன் கத்தியால் சித்தனை சரமாரியாக குத்தினாா்.

இதில் படுகாயமடைந்த சித்தனை உறவினா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் சோ்த்தனா். ஆனால், சிகிச்சைப் பலனின்றி சித்தன் உயிரிழந்தாா். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சீனிவாசனை கைது செய்தனா்.

இது தொடா்பாக தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், இருதரப்பு விசாரணைகள் மற்றும் விவாதங்கள் முடிந்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், கொலை குற்றம் உறுதி செய்யப்பட்டு சீனிவாசனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சக்திவேல் ஆஜரானாா்.