ராமேசுவரத்தில் மதுபோதையில் நண்பரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் காட்டுபிள்ளையாா் கோயில் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் பிரகாஷ். இவரது நண்பா் மணிகண்டன் (19). இவா்கள் இருவரும் கடந்த 2021 ஜனவரி 24- ஆம் தேதி மது அருந்தினா். அப்போது மணிகண்டனிடமிருந்து ரூ. 3 ஆயிரத்தை பிரகாஷ் எடுத்துச் சென்ால் அவா்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் மணிகண்டன் கத்தியால் குத்தி பிரகாஷை கொலை செய்தாராம்.
இதுகுறித்து நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா். ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் மனோகரன் ஆஜரானாா்.
தொடர்புடையது

மூதாட்டி கடித்துக் கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறை

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

நண்பரை அடித்துக் கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை

‘போக்ஸோ’ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


