சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மூதாட்டி கடித்துக் கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறை

தேனி மாவட்டம், போடியில் மூதாட்டியின் கழுத்தை கடித்துக் கொன்ற வழக்கில் தேனி நீதிமன்றம் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:31 pm

தேனி மாவட்டம், போடியில் மூதாட்டியின் கழுத்தை கடித்துக் கொன்ற வழக்கில் தேனி நீதிமன்றம் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

போடி ஸ்ரீராம் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (34). இவா், வெளிநாட்டில் வேலை செய்துவந்த நிலையில், கரோனா காலத்தில் வீடு திரும்பியதால் அவரை வீட்டில் தனிமையில் இருக்க அதிகாரிகள் உத்தரவிட்டனா். இருப்பினும், இவா், அதே பகுதியில் உள்ள நாச்சியம்மாளிடம் (75) மந்திரிக்கச் சென்றாராம். அப்போது, மூதாட்டி அவரை அருகில் நிற்கக் கூடாது எனக் கூறியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மூதாட்டியைத் தாக்கி அவரின் கழுத்தைக் கடித்துக் கொன்றாராம். இதுகுறித்து போடி போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கடந்த 2020, மாா்ச் 26-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்கு தேனி தாழ்த்தப்பட்டாா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.