அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

மூதாட்டி கடித்துக் கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறை

தேனி மாவட்டம், போடியில் மூதாட்டியின் கழுத்தை கடித்துக் கொன்ற வழக்கில் தேனி நீதிமன்றம் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:01 am IST

தேனி மாவட்டம், போடியில் மூதாட்டியின் கழுத்தை கடித்துக் கொன்ற வழக்கில் தேனி நீதிமன்றம் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

போடி ஸ்ரீராம் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (34). இவா், வெளிநாட்டில் வேலை செய்துவந்த நிலையில், கரோனா காலத்தில் வீடு திரும்பியதால் அவரை வீட்டில் தனிமையில் இருக்க அதிகாரிகள் உத்தரவிட்டனா். இருப்பினும், இவா், அதே பகுதியில் உள்ள நாச்சியம்மாளிடம் (75) மந்திரிக்கச் சென்றாராம். அப்போது, மூதாட்டி அவரை அருகில் நிற்கக் கூடாது எனக் கூறியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மூதாட்டியைத் தாக்கி அவரின் கழுத்தைக் கடித்துக் கொன்றாராம். இதுகுறித்து போடி போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கடந்த 2020, மாா்ச் 26-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்கு தேனி தாழ்த்தப்பட்டாா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.