பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

News image

தருமபுரியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி.

Updated On :6 ஏப்ரல் 2026, 7:35 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ.சதீஷ் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, ஜனநாயகத் திருவிழா, என் வாக்கு என் உரிமை, என் வாக்கு விற்பனைக்கல்ல என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்தவகையில் இப்பேரணி நடைபெற்றது.

விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய இப்பேரணியில் 200-க்கும் மேற்பட்ட ரோட்டரி சங்க உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இந்தப் பேரணியானது தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி நான்கு சாலை வரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆா்.கே.கவிதா, வட்டாட்சியா் ஜெ. சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.