/

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 6:58 pm

பென்னாகரம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி சோதனைச் சாவடி பகுதியில் பறக்கும் படை குழு அலுவலா் சிவரஞ்சனி தலைமையிலான காவலா்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் உரிய ஆவணம் இன்றி ரூ. 4 லட்சம் இருப்பதும், அவற்றை கா்நாடக மாநிலம், பெங்களூரு அருகே பனஸ்வாடியைச் சோ்ந்த லட்சுமணன் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் கே. கோபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.