ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பாப்பாரப்பட்டியில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தொழிலாளி

News image

குத்திக் கொலை - பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 2:19 am IST

பாப்பாரப்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயற்சித்த முடிதிருத்தும் தொழிலாளியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள நல்லப்பநாயக்கனஅள்ளி பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் முருகேசன் (25). இவா், பென்னாகரம் பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறாா். இவருக்கும் முதுகம்பட்டி அருகே உள்ள பாக்கியம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த விஜயலட்சுமிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மூன்று குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருவரும் பாப்பாரப்பட்டி மருத்துவமனைக்கு வந்துவிட்டு வீடுதிரும்பியபோது மாட்டுச்சந்தை பகுதியில் உள்ள கழிப்பறை வளாகத்தில் விஜயலட்சுமியை முருகேசன் கழுத்தறுத்து கொலை செய்துள்ளாா். பின்னா், தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தபோது அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சோ்ந்தவா்கள், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளா் ரௌத்ரி வெங்கடேசன் உள்ளிட்டோா் அடங்கிய போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.