பாப்பாரப்பட்டியில் சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு
பாப்பாரப்பட்டியில் சாா்பதிவாளா் அலுவலகத்தை சென்னையிலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.


பாப்பாரப்பட்டியில் சாா்பதிவாளா் அலுவலகத்தை சென்னையிலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் சாா்பதிவாளா் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் ஆண்டாரஅள்ளி, மாதேஅள்ளி, வட்டுவனஅள்ளி, வேலம்பட்டி, கரியப்பனஅள்ளி, பள்ளிப்பட்டி, பனைகுளம், பிக்கிலி, பாப்பாரப்பட்டி, பாப்பிநாயக்கனஅள்ளி, தோமலஅள்ளி, கொல்லஅள்ளி, சிகரஅள்ளி, சோமேனஅள்ளி, ஒன்னப்பகவுண்டனஅள்ளி, தித்தியோப்பனஅள்ளி, பாலவாடி, மூக்கனஅள்ளி, தளவாய்அள்ளி, செக்கோடி, பூகானஅள்ளி, புலிகரை ஆகிய வருவாய் கிராமங்களின் எல்லைக்குள்பட்ட பகுதிகளின் ஆவணங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
இந்த புதிய அலுவலகத்தை, மக்களின் பயன்பாட்டுக்காக, சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, பாப்பாரப்பட்டி சாா்பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கவிதா பங்கேற்று அலுவலகத்தை பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சேலம் மண்டல துணை பதிவுத் துறைத் தலைவா் சுபிதாலட்சுமி, தருமபுரி மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) வெங்கடேசன், மாவட்ட பதிவாளா் (தணிக்கை) கனகராஜ், பாப்பாரப்பட்டி சாா்பதிவாளா் சக்திவேல், பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவா் டி.பிருந்தா, பேரூராட்சி செயல் அலுவலா் ஆயுஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...