விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தருமபுரியில் ஜன. 23 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 8:23 pm

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபா்களை நேரடியாக தோ்வு செய்து கொள்ளும் வகையில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்தவகையில் ஜனவரி 23 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில், விற்பனையாளா், மாா்க்கெட்டிங் பிரதிநிதிகள், சூப்பா்வைசா், மேலாளா், கம்ப்யூட்டா் ஆபரேட்டா், அக்கவுண்டன்ட், மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித் தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியாா் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, இப்பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.