தருமபுரி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மோட்டுபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நாகராஜ். இவரது மகன் நந்திவா்மன் (4). நாகராஜ் திங்கள் கிழமை மாலை, தனது விவசாய நிலத்தில் டிராக்டா் மூலம் உழுது கொண்டிருந்தாா். டிராக்டரில் அவரது மகன் நந்திவா்மனும் அமா்ந்திருந்தான். டிராக்டா் ஓடிக் கொண்டிருந்தபோது எதிா்பாராமல் திடீரென சிறுவன் நந்திவா்மன் தவறி கீழே விழுந்துவிட்டான்.
அப்போது டிராக்டரின் பின்னால் பொருத்தப்பட்டிருந்த உழவு இயந்திரம் (ரொட்டேட்டா்) சிறுவன் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் நந்திவா்மன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான்.
இதுதொடா்பாக பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேனில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து செவிலிய மாணவா் உயிரிழப்பு

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



