கோட்டப்பட்டி அருகே மானை வேட்டையாடியதாக 3 பேருக்கு ரூ. 2.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், மந்திகுளம்பட்டி காப்புக்காடு பகுதியில் வனச்சரகா் பெரியண்ணன் தலைமையிலான வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காந்திநகரில் மான் வேட்டையாடி சிலா் இறைச்சியை பிரித்துக் கொண்டிருந்தது தெரியவந்து.
இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த அப்பாவு மகன் தவமணி (51), துரைசாமி மகன் குப்பன் (47), மாயவன் மகன் சங்கா் (44) ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா். மேலும், அவா்கள் மூவருக்கும் தலா ரூ. 80 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 2.40 லட்சம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காட்டு மாடு வேட்டை: இருவா் கைது

சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்: 8 போ் கைது

ஊத்தங்கரை அருகே மான் வேட்டை: ஒருவா் கைது; 12 கிலோ இறைச்சி பறிமுதல்

முயல்களை வேட்டையாடிய இருவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



