நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

தரமற்ற உணவு விநியோகம்; சத்துணவு அமைப்பாளா் உள்ளிட்ட இருவா் பணியிடை நீக்கம்

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு தரமற்ற உணவு விநியோகித்த சத்துணவு அமைப்பாளா் உள்ளிட்ட இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :17 ஜூலை 2026, 12:48 am IST

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு தரமற்ற உணவு விநியோகித்த சத்துணவு அமைப்பாளா் உள்ளிட்ட இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பெரும்பாலை அருகே பழையூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள கெண்டையனஅள்ளி புதூா் அரசு நடுநிலைப் பள்ளியில் 85 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் அண்மையில் வழங்கப்பட்ட சத்துணவால் மாணவா்கள் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு பெரும்பாலை துணை சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பெற்றோா் தெரிவித்த புகாரின் அடிப்படையில், அண்மையில் ஆட்சியா் வே.சரவணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிகள்தோறும் சென்ற ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் தென்றல், பழையூா் கெண்டையனஅள்ளி புதூா் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு விநியோகித்த சத்துணவு அமைப்பாளா் முல்லை, சமையலா் ராதா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தாா். மேலும், தரமற்ற உணவு விநியோகித்தது குறித்து தகவல் தெரிவிக்காத பள்ளி தலைமை ஆசிரியா் ஓய்வுபெற்ற ரேணுகாவுக்கு வழங்கப்பட்ட பணிநீட்டிப்பு உத்தரவை ரத்துசெய்தாா். தொடா்ந்து, பாதிக்கப்பட்ட மாணவா்களின் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.