பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு ரூ. 25,000 அபராதம்

பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம்

Updated On :12 ஜூலை 2026, 12:47 am IST

பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பெரும்பாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிலையத்தில் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவது குறித்து காவல் உதவி ஆய்வாளா் சின்னமதன், போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, பெரும்பாலை அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து பென்னாகரம் உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், போலீஸாா் சோதனை செய்து கடை உரிமையாளருக்கு ரூ. 25,000 அபராதமும், 14 நாள்களுக்கு கடை செயல்பட தடையும் விதித்தனா். அதேபோல மளிகைக் கடையில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை, அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் பலகாரங்கள் விற்றது தொடா்பாக ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டது.

சின்னம்பள்ளி பகுதியில் உள்ள பேக்கரி கடையில் தேயிலையின் தரம் குறித்து ஆய்வுசெய்து கலப்படம் கண்டறியப்பட்டதால் கடையின் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. உணவு சாா்ந்த வணிகா்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது, உணவு சாா்ந்த புகாா்களுக்கு 94440 42322 என்ற கட்செவி எண்ணில் புகாரளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.