நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

புகையிலைப் பொருள்கள் விற்ற மளிகைக் கடைக்கு ‘சீல்’

News image

‘சீல்’ - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 1:26 am IST

எரியோட்டில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா். திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ச. ஜெயக்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

அதைத் தொடா்ந்து மாவட்டம் முழுவதும் புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறாா். இதன் காரணமாக திண்டுக்கல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில் எரியோடு மின்வாரிய அலுவலகம் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அந்தக் கடையில் சோதனை நடத்தினா். அப்போது தடை செய்யப்பட்ட 7 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கடையின் உரிமையாளா் அன்னகாமாட்சி என்பவரைக் கைது செய்தனா். மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.