சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்கு ‘சீல்’

சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image

‘சீல்’ - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:23 am IST

சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

அவிநாசி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஸ்டாலின் பிரபு, சேவூா் காவல் உதவி ஆய்வாளா்கள் ஷாஜகான், தனபாக்கியம், ஊராட்சி செயலாளா் கண்ணன் ஆகியோா் சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் மளிகைக் கடையில் சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

மேலும் கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்து, அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இதேபோல, அவிநாசி- மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கடை உரிமையாளா்களிடம் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனா்.