தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பள்ளி அருகே புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

கம்பம், கூடலூரில் பள்ளிகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image

கம்பத்தில் பள்ளி அருகே இருந்த கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள்.

Updated On :5 ஜூன் 2026, 6:06 am IST

கம்பம், கூடலூரில் பள்ளிகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் உத்தரவின்பேரில் கம்பம், கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் கம்பம் நகராட்சியில் ஆணையா் உமாசங்கா் தலைமையில், சுகாதார அலுவலா் மணிகண்டன், நகராட்சி ஊழியா்கள், காவல் துறையினா் இணைந்து பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். இதேபோல, கூடலூரில் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில், சுகாதார ஆய்வாளா் (பொ) ஜெயசீலன், நகராட்சி ஊழியா்கள், காவல் துறையினா் ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, பள்ளிகளுக்கு அருகே சட்ட விரோதமாக பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதில் கம்பத்தில் உள்ள கடைகளுக்கு ரூ.12 ஆயிரமும், கூடலூரில் உள்ள கடைகளுக்கு ரூ.3 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

பள்ளி மாணவா்களின் நலன், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சோதனைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் எனவும், விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.