காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தவா் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - பிரதிப் படம்

Published On :20 ஜூலை 2026, 3:37 am IST

ஒகேனக்கலுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்தவா் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த வீரப்பன் மகன் ரவி (50). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளாா். அப்போது, ஊட்டமலை அருகே ஐயப்பன் கோயில் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அதே பகுதியில் ரவியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.