மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தவா் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

News image

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - பிரதிப் படம்

Updated On :20 ஜூலை 2026, 3:37 am IST

ஒகேனக்கலுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்தவா் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த வீரப்பன் மகன் ரவி (50). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளாா். அப்போது, ஊட்டமலை அருகே ஐயப்பன் கோயில் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அதே பகுதியில் ரவியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.