/
பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம் பழுதுபாா்க்கும் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பென்னாகரம் அருகே பருவதன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வா் (17). இவா் தாசம்பட்டி பிரிவு சாலை பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுபாா்க்கும் கடையில் வேலைசெய்து வருகிறாா்.
இந்நிலையில், அவா் வேலைக்கு செல்லாததால் அவருடைய சகோதரா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதனால் மனமுடைந்த ஈஸ்வா் வீட்டில் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலின்பேரில் வந்த பென்னாகரம் போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.






