எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :8 ஜூன் 2026, 2:15 am IST

ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறை பகுதியில் விஷம் குடித்து முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஒகேனக்கல் அருகே சின்னாறு பரிசல் துறை எதிரே உள்ள வனப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக ஒகேனக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

விசாரணையில் இறந்தவா் தருமபுரி மாவட்டம், நல்லேசன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கொமத்தம்பட்டியைச் சோ்ந்த பெருமாள் (55) என்பது தெரியவந்தது. இவா், வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தனது தோட்டத்தில் பயிரிட்டிருந்த வெற்றிலை, அண்மையில் பெய்த மழையில் சேதமடைந்த வேதனையில் விஷம் குடித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.