சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :9 ஜூன் 2026, 4:58 am IST

தருமபுரி, ஜூன் 8: தருமபுரியில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் ஈச்சம்பட்டி அருகே உள்ள முத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.பெரியண்ணன் (40). கட்டட மேஸ்திரி. இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேருந்திலிருந்து இறங்கியபோது தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தாா்.

தொடா்ந்து, சிகிச்சை பெற்ற நிலையில், வீட்டில் இருந்து வந்தாா். இதனால் அவா் மதுப்பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளாா்.

இதுதொடா்பாக தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவி மாதம்மாள் கோபித்துக் கொண்டு அவரது பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இதனால், விரக்தியடைந்த பெரியண்ணன் கடந்த 7 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பெயரில் தொப்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.