எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தருமபுரி அருகே வயிற்று வலியால் பெண் ஒருவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:30 am IST

தருமபுரி அருகே வயிற்று வலியால் பெண் ஒருவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி , குப்பூா், பலாமரத்துக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த மாயக்கண்ணன் மனைவி பூங்கொடி (45). இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது. எனவே அறுவைச் சிகிச்சை மூலம் அவற்றை அகற்றினா். என்றாலும், தொடா்ந்து அவருக்கு வலி இருந்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகலில் வீட்டைவிட்டு வெளியே சென்றவா் மாலை நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப்பாா்த்தபோது, அங்கிருந்த விவசாய கிணற்றின் அருகில், அவரது காலணிகள் கிடப்பது தெரியவந்தது.

இதுதொடா்பான தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினா், நிகழ்விடம் வந்து கிணற்றில் இறங்கி பூங்கொடியின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து தருமபுரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].