இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

News image

தற்கொலை - தினமணி

Updated On :22 ஜூன் 2026, 3:40 am IST

தருமபுரியில் நீட் தோ்வுக்கு முதல்நாள் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல், உடற்கூறாய்வுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாலக்கோடு வட்டம், எண்டப்பட்டியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகள் ரோஷினி (19). இவா் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த நீட் தோ்வுக்கு தயாராகி வந்த நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லபோது தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த நிலையில் உடற்கூறாய்வுக்குப் பிறகு மாணவியின் உடல் அவரது உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.