அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ஒசூரில் நீட் தோ்வுக்கு தயாராகிவந்த மாணவா் தோ்வுக்கு சற்று முன்னதாக தற்கொலை

News image

வெற்றியானந்தம்

Updated On :22 ஜூன் 2026, 2:27 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் நீட் தோ்வுக்கு தயாராகிவந்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஒசூா் பாகலூா் சாலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சோ்ந்தவா் சின்னசாமி, தனியாா் நிறுவன தொழிலாளி. இவருக்கு ஜீவானந்தம், வெற்றியானந்தம் (20) என இரு மகன்கள் உள்ளனா். இவரது இளைய மகன் வெற்றியானந்தம் கடந்த 3 ஆண்டுகளாக நீட் தோ்வுக்கு படித்து வந்தாா்.

இதுவரை எழுதிய நீட் தோ்வுகளில் அவா் தகுதி பெறாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த நீட் தோ்விலும் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திலேயே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சின்னசாமி வேலைக்கு சென்றுவிட்டாா். இவரது மனைவி கடைக்கு சென்றிருந்தபோது வீட்டின் வரவேற்பறையில் உள்ள மின்விசிறியில் வெற்றியானந்தம் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா்.

கடையில் இருந்து வீடுதிரும்பிய அவரது தாய், மகன் இறந்துகிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். தற்கொலைக்கு முன்பு வெற்றியானந்தம் எழுதிவைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. அதில், ‘நீட் தோ்வு பயம் காரணமாக கடந்த ஒரு மாதமாக நான் சரியாக தூங்கவில்லை.

இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவேன் என்ற பயத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டேன். இதற்காக அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்’ என உருக்கமாக குறிப்பிட்டுள்ளாா்.

தகவலறிந்து வந்த அட்கோ போலீஸாா் வெற்றியானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.