பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

நில மோசடி புகாா்: விஏஓ உள்பட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

தருமபுரியில் நில மோசடி தொடா்பாக, கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

News image

வழக்குப் பதிவு

Updated On :17 மார்ச் 2026, 11:14 pm

தருமபுரியில் நில மோசடி தொடா்பாக, கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே உள்ள ராம கொண்டஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (41). லாரி ஓட்டுநா். அவா் மற்றும் அவரது மனைவி பெயரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா பெற்ற நிலத்தில் வீடுகட்டி, குடும்பத் துடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு அந்த பகுதியில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றிய பா. காா்த்திக் (32), சம்பந்தப்பட்ட நிலத்திற்கு வட்டாட்சியரின் பட்டா மாறுதல் உத்தரவு பெறாமல் போலி ஆவணங்கள் மூலம் வேறு நபா்களுக்கு கிரையம் செய்ததாக புகாா் எழுந்தது.

இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் செல்வம் புகாா் அளித்தாா். அதன்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா், இதுதொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக், செல்வி (40), ரத்தினம்மாள் (60), ஈஸ்வரி (43), அருணா (32), செல்வராஜ் (47) வெங்கடேஸ்வரன் (35), பூமாலை (23) ஆகிய 8 போ் மீது மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.