சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இருமத்தூரில் ரூ.3 லட்சம் பறிமுதல்

இருமத்தூா் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 9:10 pm

Syndication

இருமத்தூா் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இருமத்தூரில், தோ்தல் கண்காணிப்பு அலுவலா் நிருபதுங்கா தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த ஒரு காரை சோதனை செய்ததில், காரிமங்கலம் வட்டம், முருக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கோவிந்தசாமி உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இத்தொகையை தோ்தல் பறக்கும் படையினா், அரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.