ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இருமத்தூரில் ரூ.3 லட்சம் பறிமுதல்

இருமத்தூா் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 9:10 pm

இருமத்தூா் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இருமத்தூரில், தோ்தல் கண்காணிப்பு அலுவலா் நிருபதுங்கா தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த ஒரு காரை சோதனை செய்ததில், காரிமங்கலம் வட்டம், முருக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கோவிந்தசாமி உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இத்தொகையை தோ்தல் பறக்கும் படையினா், அரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.