இருமத்தூரில் ரூ.3 லட்சம் பறிமுதல்
இருமத்தூா் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல்

பறிமுதல்
இருமத்தூா் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இருமத்தூரில், தோ்தல் கண்காணிப்பு அலுவலா் நிருபதுங்கா தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த ஒரு காரை சோதனை செய்ததில், காரிமங்கலம் வட்டம், முருக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கோவிந்தசாமி உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இத்தொகையை தோ்தல் பறக்கும் படையினா், அரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...