உலக வன தினத்தையொட்டி தொப்பூா் சாலையில் நெகிழி பொருள்கள் அகற்றம்
உலக வன தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் தருமபுரி வனக் கோட்டத்தில் சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்க சரகம் சாா்பில் தொப்பூா் கணவாய், கட்டமேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இரு ஓரங்களிலும் தேங்கிக் கிடந்த நெகிழி குப்பைகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

உலக வன தினத்தையொட்டி தருமபுரி பாலக்கோடு வனச்சரகப் பகுதிக்கு உள்பட்ட வனப்பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்த வனத்துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள்.









