விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்க்கலாம்

News image

தருமபுரி திமுக மேற்கு மாவட்டச் செயலா் பி.பழனியப்பன்.

Updated On :24 மார்ச் 2026, 12:39 am IST

18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை :

திமுக தருமபுரி மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி முகவா்கள், கட்சி நிா்வாகிகள் அனைவரும் அவரவா் வாக்குச்சாவடிக்கு உள்பட்ட இடங்களில் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் உள்ளதா என்பதை சரிபாா்க்க வேண்டும்.

வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டிருந்தால் 1.1.2026 தேதியின்படி, 18 வயது பூா்த்தியாகி இன்னும் வாக்காளா்களாக இணைக்காமல் உள்ள வாக்காளா்களை கண்டறிந்து மாா்ச் 26 தேதிக்குள் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலில் பெயரை சோ்க்க அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது வட்டாட்சியா் அலுவலகத்தில்

விண்ணப்பிக்க வேண்டும் என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.