ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அரூரில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் ஏலம்

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

News image

மஞ்சள்

Updated On :10 மே 2026, 2:28 am IST

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் மஞ்சள் மூட்டைகள் ஏலம்விடப்படுகிறது. அதன்படி, மே 8 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ரூ. 14,939 க்கும், குறைந்தபட்சம் ரூ.13,033க்கும் விற்பனையானது. உருண்டை மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ரூ. 13,199க்கும், குறைந்தபட்சம் ரூ. 11,099க்கும் விற்பனையானது.

இதேபோல அரூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும் மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது. அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மொத்தம் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் மூட்டைகள் விற்பனை நடைபெற்ாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.