நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 12:16 am

திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.

தலைமை தோ்தல் அலுவலரின் கடிதத்தின் பேரில், திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலூா் மாவட்ட தோ்தல் இருப்பறையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள 100 கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசெளந்திரவல்லி அனைத்துக் கட்சி வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாா்வையிட்டாா்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெய்சங்கா், வாக்கு எண்ணும் மையத்தின் கண்காணிப்பாளரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தணிகாசலம், தோ்தல் வட்டாட்சியா் திருமலை மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.