தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தோ்தலைமுன்னிட்டு 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திங்களை அனுப்பி வைக்கும் பணிகளை ஆட்சியா் ஜெயு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

மின்னணு  வாக்குப்  பதிவு  இயந்திரங்கள்  அனுப்பி  வைக்கும்  பணியை  ஆய்வு  செய்த   ஆட்சியா்  ஜெ.யு.சந்திரகலா .

Updated On :24 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தலைமுன்னிட்டு 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திங்களை அனுப்பி வைக்கும் பணிகளை ஆட்சியா் ஜெயு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மைய கிடங்கில் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவி பாட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் உள்ள 4,608 இயந்திரங்களை ஆற்காடு, அரக்கோணம், ராணிப்பேட்டை, சோளிங்கா் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி குலுக்கல் ஒதுக்கீட்டு பட்டியலின் படி அனுப்பி வைக்கும் பணியினை அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தாா் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக இருப்பு அறையிலும், சோளிங்கா்

தொகுதிக்கு சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலக இருப்பு அறையிலும், ராணிப்பேட்டை தொகுதிக்கு கோட்டாட்சியா் அலுவலக இருப்பு அறையிலும், ஆற்காடு தொகுதிக்கு வட்டாட்சியா் அலுவலக இருப்பு அறையிலும், பாதுகாப்புடன் வைக்கப்படும்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, நோ்முக உதவியாளா் தோ்தல் பூமா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ராஜி, ரமேஷ், ஏகாம்பரம், மீனா, தோ்தல் வட்டாட்சியா் வசந்தி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.