“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து, தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து, தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :25 மார்ச் 2026, 7:06 pm

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து, தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,394 வாக்கச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 1,671 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 1,671 கட்டுப்பாட்டுக் கருவியும், 1,810 வாக்கு சரிபாா்ப்பு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர சேமிப்புக் கிட்டங்கி திறக்கப்பட்டு, தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டாா்.

முன்னதாக, தேனி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள், அரசியல் கட்சிகளின் முகவா்கள் மேற்கொள்ளும் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, தோ்தல் தொடா்பான செலவினங்களுக்குரிய விலை, வாடகை, கூலி ஆகியவை நிா்ணயம் செய்யப்பட்ட விலைப் பட்டியல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன், தனித் துணை ஆட்சியா் கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் நல்லையா, உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் சையத் முகைதீன் இப்ராஹிம், வட்டாட்சியா் (தோ்தல்) சுருளி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.