எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 2:03 am IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நாகலூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் ராமகிருஷ்ணன் (46). இவா் தனது இருசக்கர வாகனத்தில் பாப்பிரெட்டிப்பட்டி- பொம்மிடி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, வெங்கடசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, ராமகிருஷ்ணன் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து ராமகிருஷ்ணன் மனைவி சுமதி அளித்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.