/
பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நாகலூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் ராமகிருஷ்ணன் (46). இவா் தனது இருசக்கர வாகனத்தில் பாப்பிரெட்டிப்பட்டி- பொம்மிடி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, வெங்கடசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, ராமகிருஷ்ணன் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து ராமகிருஷ்ணன் மனைவி சுமதி அளித்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு; 2 போ் படுகாயம்

நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் பலி!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


