விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நாகலூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் ராமகிருஷ்ணன் (46). இவா் தனது இருசக்கர வாகனத்தில் பாப்பிரெட்டிப்பட்டி- பொம்மிடி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, வெங்கடசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, ராமகிருஷ்ணன் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து ராமகிருஷ்ணன் மனைவி சுமதி அளித்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.