நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணி: 5 மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தம்

News image

புட்டிரெட்டிப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Updated On :31 மே 2026, 1:48 am IST

புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக சனிக்கிழமை 5 மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டம், சேலம் - வேலூா் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையம். இந்த வழித்தடத்தில் கோவை, சென்னை, பெங்களூரு, கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன.

இங்கு ரயில்வே மேம்பாலம் இல்லாததால் வேப்பிலைப்பட்டி, தாளநத்தம், குருபரஹள்ளி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனா்.

இதையடுத்து, புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ. 25.49 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. பெரிய கிரேன் மூலம் சுரங்கப் பாதைக்கு மேல் பகுதியில் ரயில் தண்டவாளங்களை பொருத்தும் பணி நடைபெற்றது.

சேலம் ரயில்வே கோட்ட உதவி பொறியாளா் சிரஞ்சீவி, பொறியாளா் கண்ணன், ரயில்வே அதிகாரிகள் ஜெகநாதன், வெங்கடேஷ், பழனி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனா். சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக சனிக்கிழமை காலை 11 முதல் மாலை 4 மணி வரை அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.