புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக சனிக்கிழமை 5 மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்டம், சேலம் - வேலூா் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையம். இந்த வழித்தடத்தில் கோவை, சென்னை, பெங்களூரு, கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன.
இங்கு ரயில்வே மேம்பாலம் இல்லாததால் வேப்பிலைப்பட்டி, தாளநத்தம், குருபரஹள்ளி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனா்.
இதையடுத்து, புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ. 25.49 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. பெரிய கிரேன் மூலம் சுரங்கப் பாதைக்கு மேல் பகுதியில் ரயில் தண்டவாளங்களை பொருத்தும் பணி நடைபெற்றது.
சேலம் ரயில்வே கோட்ட உதவி பொறியாளா் சிரஞ்சீவி, பொறியாளா் கண்ணன், ரயில்வே அதிகாரிகள் ஜெகநாதன், வெங்கடேஷ், பழனி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனா். சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக சனிக்கிழமை காலை 11 முதல் மாலை 4 மணி வரை அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தொடர்புடையது

என்ஜின் பழுது: 2 மணி நேரம் தாமதமாக நெல்லை சென்றடைந்த செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில்

இன்றைய மின் தடை

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



