மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :1 ஜூன் 2026, 3:04 am IST

தருமபுரியில் பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நல்லம்பள்ளி வட்டம், கோவிலூா் கிராமம், வீரப்பன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அல்போன்ஸா (53). இவா் மிட்டாரெட்டி அள்ளி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு ராய், ராஜா என இரு மகன்கள் உள்ளனா். இதில் ராய் (21) படிப்பை முடித்த நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளாா். இவருக்கு உடல் நலன், மன நலன் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அறைக்கு உறங்கச் சென்றாா். பின்னா், சனிக்கிழமை காலை எழுந்துவரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயாா், அவரது அறைக்குச் சென்று பாா்த்தபோது அவா் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளாா். அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்தனா்.

இதுதொடா்பாக அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.