15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

மதிப்பெண்கள் குறைந்த விரக்தி:பிளஸ் 2 மாணவி தீக்குளித்து சாவு

மதிப்பெண்கள் குறைந்த விரக்தியில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :12 மே 2013, 5:34 am IST

மதிப்பெண்கள் குறைந்த விரக்தியில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட லளிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியண்ணன். கட்டடத் தொழிலாளியான இவர், பெங்களூரில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்லம்மாள்.

இவர்களது மகள் சந்தியா (17), பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. இதில், 701 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார் சந்தியா. ஆனால், அவர் அதிக மதிப்பெண்கள் பெறுவோம் என்று நம்பியிருந்தாராம். கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்தால் நர்சிங் கல்லூரியில் சேர்ந்து பயில முடியும் என நினைத்திருந்தார்.

ஆனால், குறைவான மதிப்பெண்கள் கிடைத்திருப்பதால் தன்னால் விரும்பிய படிப்பில் சேர முடியாது என்ற விரக்தியில் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அருகிலிருந்தோர் விரைந்து வந்து சந்தியாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.