சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

அரூரில் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ததால் பரபரப்பு

அரூரில் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

அரூரில் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம், டி.அம்மாப்பேட்டையைச் சேர்ந்த விவசாயிகள் சிவஞானம், கண்ணன், வகுத்துப்பட்டியைச் சேர்ந்த பெருமியம்மாள், பையர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெருமாள், கசியம்பட்டியைச் சேர்ந்த மல்லிகா ஆகியோரது சுமார் 5.37 ஏக்கர் நிலங்களை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு கையகப்படுத்தியது.

கையகப்படுத்தப்பட்ட இந்த நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என அரூர் சார்பு நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில், விவசாயிகள் 5 பேருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்க அரூர் சார்பு நீதிமன்றம் 2012-இல் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், வருவாய்த் துறையினர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்நிலையில், மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் 5 பேருக்கும் வட்டியுடன் சேர்த்து ரூ.49.11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பிறகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால், அரூர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஜோதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின்படி, தனி வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற நீதிமன்ற ஊழியர்கள் அங்கிருந்த மேஜைகள், டேபிள் உள்ளிட்ட தளவாடங்களை மினி சரக்கு ஆட்டோவில் ஏற்றினர்.

அப்போது, நீதிமன்ற ஊழியர்களின் நடவடிக்கைக்கு அரூர் வட்டாட்சியர் விஜயா தலைமையிலான வருவாய்த் துறையினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டனர். இதனால் அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.