வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 13 பேர் காயம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 13 பேர் திங்கள்கிழமை காயமடைந்தனர்.

News image
Updated On :14 மே 2018, 9:15 pm

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 13 பேர் திங்கள்கிழமை காயமடைந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த சின்னதுரை மகன் முகேஷ் (23). இவருடன், இவரது உறவினர்கள் ஏற்காட்டுக்கு ஒரு வேனில் சென்றுள்ளனர்.
அப்போது, தென்கரைக்கோட்டை- பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் சென்றபோது, வாகன ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் சுற்றுலா வேன் சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இதில், முகேஷ் (23), சுவாதி (22), ரேவதி (32), தியா (7), நந்தா (13), முருகன் (38), சேகர் (26), மங்கா (34), பிரவீன் (9), பிரியதர்ஷினி (13), ரமேஷ் (45), கோகுல் (12), சிலம்பரசன் (24) ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா வேன் ஓட்டுநர் குமரேசன் (45) என்பவர் தலைமறைவானார்.
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.