திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பதவி: மே 19-இல் நேர்காணல்
தருமபுரி மாவட்ட திமுக தகவல் தொழிநுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பதவியிடங்களுக்கு வருகிற மே 19-இல் நேர்காணல் தொடங்குகிறது என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்ட திமுக தகவல் தொழிநுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பதவியிடங்களுக்கு வருகிற மே 19-இல் நேர்காணல் தொடங்குகிறது என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, திமுக மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தருமபுரி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு நகரம், ஒன்றியம், பேரூர், வார்டு, வாக்குச்சாவடி வாரியாக ஒருங்கிணைப்பாளர்களுக்கான நேர்காணல், மாவட்ட கட்சி அலுவலகத்தில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக நடைபெற உள்ளது. மே 19 அரூர் சட்டப் பேரவைத் தொகுதி, மே 20 பென்னாகரம் தொகுதி, மே 21 பாலக்கோடு தொகுதி, மே 22 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, மே 23 தருமபுரி தொகுதிக்கும் நேர்காணல் நடைபெற உள்ளன. எனவே, இப்பதவியிடங்களுக்கான விண்ணப்பதாரர்கள் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்புக்கு: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.ஜெகநாதன். செல்லிடப் பேசி எண் : 9442832466.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...