செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற 11 பேர் கைது

தருமபுரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற 11 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :21 மே 2018, 10:46 pm

தருமபுரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற 11 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி நகரில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், தருமபுரி நகரக் காவல் ஆய்வாளர் ரத்தினகுமார், உதவி ஆய்வாளர் சுந்தரம், கிருஷ்ணவேணி உள்ளிட்டோர், ஆறுமுக ஆசாரி தெரு, கடைவீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். இச் சோதனையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப்பொருள்களை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, புகையிலை பொருள்கள் விற்பனை
செய்த குமார்(34), மணிவண்ணன், ராஜேந்திரன்(58), சண்முகம்(40), ராமமூர்த்தி, ராஜேஸ்வரி(44) உள்பட 11 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய நரேஷ்குமார்(24) மற்றும் லால்ராம் செளத்ரி ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.