கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஒகேனக்கல்லில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்க எதிர்ப்பு

ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் பாதையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்க, வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்புத்

News image
Updated On :12 நவம்பர் 2018, 10:03 pm

DIN


ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் பாதையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்க, வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி வரை தங்களது வாகனங்களில் சென்று வந்தனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு தங்கும் விடுதியின் அருகில் பிரதான அருவிக்குச் செல்லும் பாதையில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், பிரதான அருவிக்குச் செல்லும் சாலையில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைப்பதால், வியாபாரிகள், உள்ளூர்வாசிகள், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து பிரதான அருவிக்கு செல்லும் சாலையில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.