வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பாப்பிரெட்டிபட்டி போராட்ட தேதி மாற்றம்: டிடிவி தினகரன்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் புதன்கிழமை (நவ.14) நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை

News image
Updated On :12 நவம்பர் 2018, 10:02 pm

DIN


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் புதன்கிழமை (நவ.14) நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை (நவ.15) நடைபெறும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:- பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும் முற்றிலுமாக புறக்கணிக்கும் தமிழக அரசின் மக்கள் விரோத மனநிலையை கண்டிக்கும் வகையில், அங்கு புதன்கிழமை உண்ணாவிரத போராட்டத்துக்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் பாப்பிரெட்டிபட்டியில் வரும் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.