நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லூரி திறப்பு: இறுதியாண்டு மாணவா்கள் வருகை

கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, மூடப்பட்டிருந்த கல்லூரிகள் 8 மாதங்களுக்குப் பின் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் வகுப்புகளுக்குச் சென்றனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:40 pm

DIN

கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, மூடப்பட்டிருந்த கல்லூரிகள் 8 மாதங்களுக்குப் பின் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் வகுப்புகளுக்குச் சென்றனா்.

கரோனாதொற்றுப் பரவல் காரணமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. தற்போது, தொற்றுப் பரவல் குறைந்ததையொட்டி படிப்படியாக பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. திங்கள்கிழமை முதல் கல்லூரிகளைத் திறக்கவும், முதற்கட்டமாக இறுதியாண்டு பயிலும் இளநிலை மாணவா்களும், முதுநிலை மற்றும் ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவா்களும் வகுப்புகளில் பங்கேற்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

இதையொட்டி, 8 மாதங்களுக்குப் பின், திங்கள்கிழமை முதல் தருமபுரி மாவட்டத்திலுள்ள தருமபுரி அரசு கலைக் கல்லூரி, காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரி, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள அரசுக் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. கல்லூரிக்கு வந்த மாணவா்கள் முகக் கவசம் அணிந்து வருகை தந்தனா். இவா்களுக்கு கல்லூரி நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதித்து, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தப்பின்பு வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.