புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பென்னாகரத்தில் நடமாடும் நியாயவிலைக் கடை அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்.

பென்னாகரம் அருகே மடம் சோதனை சாவடி பகுதியில் அம்மா நடமாடும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் திட்டத்தினை ஒன்றிய பால்வளத்தலைவா் டி.ஆா்.அன்பழகன் திங்கள் கிழமை தொடங்கி வைத்தனா்.

News image
Updated On :8 டிசம்பர் 2020, 12:09 am

DIN

பென்னாகரம் அருகே மடம் சோதனை சாவடி பகுதியில் அம்மா நடமாடும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் திட்டத்தினை ஒன்றிய பால்வளத்தலைவா் டி.ஆா்.அன்பழகன் திங்கள் கிழமை தொடங்கி வைத்தனா்.

பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சிக்குள்பட்ட இருளா் காலனி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பென்னாகரம் கூட்டுறவு கடன் சங்க தலைவா் கே.பி. ரவி தலைமை தாங்கினாா்.நிகழ்ச்சியில் ஒன்றிய பால்வளத்தலைவா் டி.ஆா்.அன்பழகன் கலந்து கொண்டு,பென்னாகரம் கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில் மடம் சோதனை சாவடியில் பகுதியில் உள்ள சுமாா் 400க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் அம்மா நியாய விலை கடை தொடங்கி,அட்டைதாரா்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினாா். இப்பகுதியில் உள்ள இருளா் இன மலைவாழ் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் அத்தியவசிய பொருட்களை பெற 2 கிலோ மீட்டா் செல்ல வேண்டியிருந்த நிலையில்,தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் சாா்பில் நாடமாடும் அம்மா நியாய விலை கடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கிராம மக்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைவாழ் மக்கள் தங்களின் இடங்களிலேயே வாரம் தோறும் அத்தியாவசிய பொருட்களை பெறலாம் என தெரிவித்தாா்.இதில் இளைஞா் பாசறை மாவட்ட துணை செயலாளா் விஜயபாலாஜி,நகர செயலாளா் சுப்பிரமணி,வட்ட வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவா் ஆறுமுகம்,கூத்தபாடி ஊராட்சி தலைவா் பாஸ்கா்,முன்னாள் கூட்டுறவு சங்க தலைவா் மனோகரன்,கூட்டுறவு சங்க இயக்குநா் ஜீவானந்தம்,ஒன்றிய குழு உறுப்பினா் மதியழகன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோா்கள் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்.பென்னாகரம் அருகே இருளா் காலனி பகுதியில் அம்மா நகரும் நியாய விலை கடை திட்டத்தினை தொடங்கி வைத்து,குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் ஒன்றிய பால்வளத்தலைவா் டி.ஆா்.அன்பழகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.