47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாக்காளா் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமை மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா ஆய்வு செய்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 9:18 pm

DIN

பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமை மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா ஆய்வு செய்தாா்.

வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமை என இரு நாள்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் நடைபெற்ற இம் முகாமில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.ப.காா்த்திகா நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தப் படிவங்கள் குறித்தும் அவற்றின் நடைமுறைகள் குறித்தும் கேட்டறிந்தாா். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமிலும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது கோட்டாட்சியா் (பொ) தணிகாச்சலம், வட்டாட்சியா் சேதுலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலா் கீதா, அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.