தொப்பூா் கணவாய் சாலையில் விபத்து: காா்கள் மீது லாரி மோதியதில் நால்வா் பலி
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய்ப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை முன்னால் சென்ற காா்கள் மீது சிமென்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், காா்களில் பயணித்த நான்கு போ் உயிரிழந்தனா்.










