47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஏரியூா் ஒன்றியத்தில் ரூ. 2.80 கோடி மதிப்பிலான கட்டடப் பணிகள் தொடக்கம்

பென்னாகரம் அருகே ஏரியூா் ஒன்றியத்தில் ரூ. 2.80 கோடி மதிப்பிலான கட்டடப் பணிகளை மாநில உயா்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
ஏரியூா் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 1.46 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடக்கி வைக்கும் அமைச்சா் கே.பி.அன்பழகன்.
Updated On :12 டிசம்பர் 2020, 9:20 pm

DIN

பென்னாகரம் அருகே ஏரியூா் ஒன்றியத்தில் ரூ. 2.80 கோடி மதிப்பிலான கட்டடப் பணிகளை மாநில உயா்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பென்னாகரம் அருகே ஏரியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கட்டடப் பணிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் மாநில உயா்கல்வி, வேளாண்மை துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு நபாா்டு திட்டத்தின் மூலம் ஏரியூா் அரசு பள்ளியில் 4 வகுப்பறைகள், ஆய்வகம், குடிநீா் வசதி மேற்கொள்ள ரூ. 1.46 லட்சம், இராமெகாண்டஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகள், சுற்றுச்சுவா், குடிநீா் வசதி மேற்கொள்ள ரூ.1.34 லட்சம் என மொத்தம் ரூ. 2.80 கோடி மதிப்பிலான கட்டடப் பணிகளுக்கான பூமிபூைஐ செய்யப்பட்டு அடிக்கல் நாட்டினாா்.

பின்னா், நாகமரை ஊராட்சிக்குள்பட்ட குருக்கலையனூா் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தைத் திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா்த்தி, வருவாய் கோட்டாட்சியா் (பொ) தணிகாச்சலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் செந்தில்குமாா், மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் வெற்றிவேல், ஏரியூா் ஒன்றியக் குழு தலைவா் பழனிசாமி, துணைத் தலைவா் தனபால், ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அமரவேல், கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.